ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
மலையாள திரை உலகின் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் மம்முட்டி நடிப்பில் சில நாட்களுக்கு முன்பு வெளியான நண்பகல் நேரத்து மயக்கம் என்கிற படம் அவர் இப்படி எல்லாம் கூட எளிமையான, வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிப்பாரா என்கிற ஆச்சர்யத்தை மீண்டும் ஒருமுறை ஏற்படுத்தியது. அந்த அளவிற்கு ஒரு எளிய கிராமத்து மனிதனாக அந்த படத்தில் நடித்திருந்தார் மம்முட்டி. இதைத்தொடர்ந்து அடுத்ததாக அவர் நடிக்க இருக்கும் புதிய படத்தில் இதற்கு நேர் மாறாக துப்பறியும் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்கிறார் மம்முட்டி. இந்த படத்திற்கு கண்ணூர் ஸ்குவாட் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
மலையாள சினிமாவின் பிரபல ஒளிப்பதிவாளர் ஆன ரோபி வர்கீஸ் ராஜ் என்பவர் இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். வழக்கம் போல இந்த படத்தின் கதையும் மம்முட்டிக்கு ரொம்பவே பிடித்து போனதால் தன்னுடைய சொந்த தயாரிப்பு நிறுவனமான மம்முட்டி கம்பெனி சார்பில் தானே இந்த படத்தை தயாரிக்கிறார். இன்னும் இதன் டைட்டில் குறித்த அதிகாரப்பூர்வ போஸ்டர் வெளியாகாத நிலையில் தானே படத்தின் தயாரிப்பாளர் என்பதால் சமீபத்திய பேட்டி ஒன்றில் இந்த படத்தின் டைட்டில் பற்றி வெளிப்படையாக கூறியுள்ளார் மம்முட்டி.