இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
தெலுங்கு திரையுலகின் நட்சத்திர நடிகரான சிரஞ்சீவியின் சகோதரர்களில் ஒருவர்தான் நடிகர் நாகபாபு. இவரது மகள் நிஹாரிகா, விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ஒரு நல்ல நாள் பார்த்து சொல்கிறேன் என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். கடந்த 2020 டிசம்பர் மாதம் இவருக்கும் ஐதராபாத்தில் மென்பொறியாளராக பணியாற்றி வரும் சைதன்யா என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது.
இந்தநிலையில் சில நாட்களாகவே நிஹாரிகாவும் அவரது கணவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கின்றனர் என்கிற தகவல் சோசியல் மீடியாவில் வெளியானது. இதை உறுதிப்படுத்தும் விதமாக நிஹாரிகாவும், சைதன்யாவும் தங்களது சோசியல் மீடியா கணக்கை ஒருவருக்கு ஒருவர் அன் பாலோ செய்துள்ளனர்.
அதேசமயம் நிஹாரிக தனது கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது சோசியல் மீடியா கணக்கில் அப்படியே விட்டு வைத்திருக்க, அவரது கணவரோ தாங்கள் இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் அனைத்தையும் தனது சோசியல் மீடியா பக்கத்தில் இருந்து நீக்கிவிட்டார். இதையெல்லாம் வைத்து தான், தற்போது இவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர் என்கிற செய்தி சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது.