துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
இந்திய அரசால் ஆண்டுதோறும் வழங்கப்படும் பத்மஸ்ரீ, பத்மபூஷண், பத்ம விபூஷண் விருதுகள் நேற்று டில்லியில் நடைபெற்ற விழாவில் வழங்கப்பட்டது. இதில் 6 பேருக்கு பத்ம விபூஷன் விருதும், 9 பேருக்கு பத்ம பூஷன் விருதும், 91 பேருக்கு பத்மஸ்ரீ விருதும் வழங்கப்பட்டன. குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இந்த விருதுகளை வழங்கினார். இந்த விழாவில் பிரதமர் மோடி மத்திய அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டார்கள். இதில் ஆர்ஆர்ஆர் படத்தின் நாட்டு நாட்டு என்ற பாடலுக்காக ஆஸ்கர் விருது பெற்ற இசை யமைப்பாளர் கீரவாணிக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. அதேபோல் சமீபத்தில் மறைந்த பின்னணி பாடகி வாணி ஜெயராமுக்கும் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. அதை அவரது குடும்பத்தைச் சார்ந்தவர்கள் பெற்றுக் கொண்டார்கள். நடிகை ரவீனா டாண்டனும் பத்மஸ்ரீ விருது பெற்றார்.
பத்மக்ஷ விருது பெற்ற கீரவாணி உடன் இருக்கும் போட்டோவை பகிர்ந்து, ‛‛என் பெத்தண்ணாவை(பெரிய அண்ணன்) நினைத்து பெருமைப்படுகிறேன்'' என குறிப்பிட்டுள்ளார் இயக்குனர் ராஜமவுலி.