ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
கேஜிஎப் படத்தின் இரண்டு பாகங்களின் தொடர் வெற்றியால் பான் இந்திய நடிகராக மாறிவிட்டார் கன்னட நடிகர் யஷ். இதைத்தொடர்ந்து அவரது அடுத்த படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகமாக இருக்கிறது. இந்த நிலையில் தற்போது நடிகர் யஷ் தனது அடுத்த படத்தின் லொகேஷன் பார்ப்பதற்காக இலங்கையில் முகாமிட்டு உள்ளார் என்கிற தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் யஷ் தற்போது இலங்கையில் உள்ள யாழ்ப்பாணம் பகுதியில் உள்ள யாழ் தேசிய பூங்காவை சுற்றிப் பார்த்து ரசித்துள்ளார்.
அதே சமயம் அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ள இலங்கை அரசு அதிகாரிகளில் ஒருவர் யஷ் பற்றி பெருமையுடன் குறிப்பிட்டுள்ளதுடன் அவர் இலங்கையில் தனது அடுத்த படத்தின் படப்பிடிப்பு நடத்த சில இடங்களை தேர்வு செய்வதற்காக வந்துள்ளார் என்கிற தகவலையும் தனது சோசியல் மீடியா பக்கத்தில் தெரியப்படுத்தி உள்ளார்.