இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
கடந்த ஞாயிறன்று கேரளாவில் மலப்புரம் அருகில் உள்ள தினூரில், தூவல் தீரம் ஆற்றில் சவாரி சென்ற சுற்றுலா படகு கவிழ்ந்து 22 பேர் உயிரிழந்த நிகழ்வு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உயிரிழந்த குடும்பத்திற்கு கேரள அரசு தலா 10 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்த நிலையில் கடந்த வெள்ளியன்று மலையாளத்தில் வெளியான 2018 என்கிற படத்தின் தயாரிப்பாளர், இந்த விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு தங்களது படக்குழு சார்பாக தலா ஒரு லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்குவதாக அறிவித்துள்ளார்..
கடந்த 2018ல் கேரளாவையே புரட்டிப்போட்ட மழை வெள்ளத்தையும் அதற்காக நடந்த மீட்பு பணிகளையும் மையமாக வைத்து உருவாகியுள்ள படம் தான் 2018. டொவினோ தாமஸ், வினீத் சீனிவாசன், குஞ்சாகோ போபன், அபர்ணா பாலமுரளி உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ள இந்தப்படத்தை ஜூட் ஆண்டனி ஜோசப் என்பவர் இயக்கியுள்ளார். ஏற்கனவே நிவின்பாலி-நஸ்ரியாவை வைத்து 'ஓம் சாந்தி ஒசானா' என்கிற படத்தை இயக்கிய இவர் அதற்கடுத்து 'ஒரு முத்தச்சி கதா' என்கிற படத்தை இயக்கி இருந்தார்.
ஆனால் இவருக்கு மற்ற படங்களில் சின்னச்சின்ன வேடங்களில் நடிக்க வாய்ப்பு வரவே, டைரக்சனை ஒதுக்கி வைத்துவிட்டு நடிக்க போய்விட்டார். இந்த நிலையில் தான் ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு இந்த 2018 படத்தை இயக்கியுள்ளார். கேரளாவில் அந்த மழை வெள்ளத்தின் பொது சந்தித்த துயரத்தை தரூபமாக படமக்கியுள்ளதாக கூறி, இந்த படம் தற்போது ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பையும் வசூலையும் பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.