தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
இயக்குனர் ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கத்தில் டோவினோ தாமஸ், குஞ்சாகா போபன், வினீத் சீனிவாசன், அபர்ணா பாலமுரளி உள்ளிட்டோர் நடித்து வெளிவந்த திரைப்படம் 2018. கேரளாவில் 2018ல் ஏற்பட்ட பெரும் மழை வெள்ளம் பாதிப்பை மையப்படுத்தி இப்படம் வெளிவந்தது. படம் வெளியான முதலே பாராட்டுகளையும், வசூலையும் குவித்து வந்த இந்தப்படம் ஏற்கனவே உலகளவில் அதிகம் வசூலித்த மலையாள படமான புலி முருகன் படத்தின் சாதனையை முறியடித்தது. இப்போது மற்றொரு புதிய சாதனையை இப்படம் நிகழ்த்தியுள்ளது. இந்த படம் வெளியாகி 30 நாட்கள் கடந்த நிலையில் தற்போது உலகளவில் ரூ. 200 கோடி வசூலை எட்டியுள்ளது. இதுவே மலையாள சினிமாவின் முதல் ரூ. 200 கோடி வசூலித்த படம் என்று ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.