ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
மலையாள திரை உலகில் வில்லன், குணச்சித்திர மற்றும் கதையின் நாயகன் என மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகர் ஷைன் டாம் சாக்கோ. தமிழில் விஜய் நடித்த பீஸ்ட் படத்தில் வில்லன்களில் ஒருவராக கொஞ்ச நேரமே வந்து போகும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதேசமயம் தன்னை அந்தப்படத்தில் மோசமாக காட்டியதற்காக இயக்குனர் நெல்சன் மீது விமர்சனங்களையும் வைத்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
அது மட்டுமல்ல இவர் பங்கு கொள்ளும் பேட்டிகள் அனைத்துமே ஒரு பக்கம் சுவாரசியமாக இருக்கும். இன்னொரு பக்கம் அதன் மூலம் ஏதாவது சர்ச்சையும் பரபரப்பும் கிளம்புவதும் வாடிக்கையாக இருக்கிறது. இந்த நிலையில் தெலுங்கில் தசரா படத்தைத் தொடர்ந்து தற்போது ஷைன் டாம் சாக்கோ நடித்துள்ள ரங்கபாலி என்கிற படத்தில் புரமோஷன் நிகழ்ச்சிக்காக தெலுங்கு சேனல் ஒன்றில், படத்தின் இயக்குனர் பவன் பசமஷெட்டி என்பவருடன் இணைந்து கலந்து கொண்டார்.
அப்போது அவர் அணிந்திருந்த நீல நிற சட்டை தனக்கு பிடித்திருப்பதாக நிகழ்ச்சியின் பெண் தொகுப்பாளர் கூறியதும் உடனே அந்த சட்டையை அவருக்கு பரிசாக தருவதற்காக கழட்ட துவங்கினார் ஷைன் டாம் சாக்கோ. அருகில் இருந்த இயக்குனர் பதறிப்போய் தடுக்க முயன்றார். ஆனாலும் தொகுப்பாளரோ பரவாயில்லை கழட்டி கொடுங்கள் என கேட்க, அதற்கு ஷைன் சாக்கோ நான் இந்த சட்டையை கொடுத்ததும் அதை நீங்கள் இங்கேயே அணிந்துகொள்ள வேண்டும் என ஒரு நிபந்தனை விதித்தார்.
ஆனால் நல்லபடியாக அந்த அளவுடன் இந்த சட்டை குறித்த உரையாடல் நின்று விட்டது. மீண்டும் சட்டையை அணிய துவங்கிய ஷைன் டாம் சாக்கோவிடம் நல்ல வேலையாக உங்கள் பேண்ட் நன்றாக இருக்கிறது என நான் சொல்லவில்லை என்று அந்த பெண் தொகுப்பாளர் கூறி தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டார்.