இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக நடித்து வரும் கிச்சா சுதீப் அதை தாண்டி தமிழ், தெலுங்கு மொழிகளிலும் கூட நடித்து வருகிறார். தற்போது தாணு தயாரிப்பில் உருவாகி வரும் படத்தில் நடித்து வருகிறார் சுதீப். இந்த நிலையில் பிரபல கன்னடத் தயாரிப்பாளரான எம்.என்.குமார் என்பவர், சுதீப் தனது தயாரிப்பில் படம் நடிப்பதாக பணம் வாங்கிக்கொண்டு நடிக்க மறுத்து வருகிறார் என்று கடந்த சில தினங்களுக்கு முன்பு குற்றம் சாட்டினார். கன்னட திரையுலகில் இது மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் தன் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் விதமாக வேண்டுமென்றே தன் மீது அவதூறு கூறியுள்ளார் என்று தயாரிப்பாளர்கள் எம்.என்.குமார் மற்றும் எம்.என்.ரவி ஆகியோர் மீது வழக்கு தொடர்ந்துள்ளார் நடிகர் சுதீப். இதில் இவர்கள் தன்னிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் பத்து கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு தொகையாக வழங்க வேண்டும் என்றும் கோரியுள்ளார் கிச்சா சுதீப்.