ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
நடிகர் மோகன்லால் சில நாட்களுக்கு முன்பு தான், மலையாளத்தில் லிஜோ ஜோஸ் பள்ளிசேரி டைரக்சனில் தான் நடித்து வந்த மலைக்கோட்டை வாலிபன் என்கிற படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்தார். இதை தொடர்ந்து அவர் தனது புதிய படங்களின் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்கு முன்பாக சற்று ரிலாக்ஸ் செய்யும் விதமாக தனது குடும்பத்துடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.. சில நாட்களுக்கு முன்பு சிங்கப்பூர் சென்ற அவர் தற்போது லண்டனில் தங்கியுள்ளார்.
லண்டனில் கிராண்ட்ஸ்லாம்' போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் பெண்களுக்கான ஒற்றையர் அரை இறுதி போட்டி நடைபெற்றது. இந்த போட்டியை மோகன்லால் நேரில் கண்டு களித்தார். மேலும் அங்கிருந்த தனது நண்பர்களுடன் தான் எடுத்துக்கொண்டு சில புகைப்படங்களையும் தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார் மோகன்லால்.