துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் | பிளாஷ்பேக் : எம்.எஸ்.பாஸ்கருக்கு விருது கிடைத்திருக்க வேண்டிய கதாபாத்திரங்கள் | மீண்டும் விசாரணைக்கு வருகிறது மான்வேட்டை வழக்கு | வசூலை குவிக்கும் இந்திய அனிமேஷன் படம் | சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்கும் குழந்தைகள் சினிமா | பார்க்கிங் படத்துக்கு 3 விருதுகள் : இயக்குனர், ஹீரோ, எம்.எஸ்.பாஸ்கர் நெகிழ்ச்சி |
கேரளாவின் முன்னாள் முதல்வரான உம்மன் சாண்டி நேற்று உடல் நலக்குறைவால் காலமானார். பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் மரணம் எய்திய நிலையில் அவரது உடல் அங்கிருந்து விமானம் மூலமாக திருவனந்தபுரம் கொண்டுவரப்பட்டது. அப்போது அவரது உடலை பெற்று அவரது இல்லத்திற்கு கொண்டு செல்வதற்காக வந்திருந்தவர்களில் நடிகர் குஞ்சாக்கோ போபனும் ஒருவர்.
இந்த நிலையில் தற்போது உம்மன் சாண்டியின் மறைவு குறித்து குஞ்சாக்கோ போபன் கூறும்போது, "அவரது மறைவு எனக்கு பெர்சனல் ஆக மிகப்பெரிய இழப்பு" என்று கூறியுள்ளார். இதுபற்றி செய்தியாளர்களிடம் அவர் பேசும்போது, “நான் இங்கே அவரது உடலை பெறுவதற்காக வந்திருக்கிறேன் என்றால் அவருடன் எனக்கு நீண்ட காலமாக பழக்கம் இருந்து வருகிறது. அவருடைய குடும்பத்தில் ஒருவனாகவே நான் பழகி வந்திருக்கிறேன். என்னுடைய வீட்டின் அனைத்து நிகழ்வுகளிலும் அவர் தவறாமல் கலந்து கொண்டிருக்கிறார். அது மட்டுமல்ல அவரது வீட்டிற்கு எந்த நேரத்திலும் நான் வந்து செல்லும் சுதந்திரத்தையும் அளித்திருந்தார்.
நான் பார்த்த எளிமையான மக்கள் தலைவர்களில் முதன்மையானவர் உம்மன் சாண்டி. ஒருநாள் நள்ளிரவு அவரது வீட்டிற்கு சென்றபோது கூட மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்துவது குறித்து கோப்புகளை பார்வையிட்டுக் கொண்டும் அருகில் இருந்த அதிகாரிகளிடம் பேசிக்கொண்டும் இருந்தார். அப்படிப்பட்டவரின் இழப்பு எங்கள் குடும்பத்தைப் பொறுத்தவரை பேரிழப்பு தான்” என்று தனது சோகத்தை வெளிப்படுத்தினார் குஞ்சாக்கோ கோபன்.