தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

மலையாள சினிமாவின் சாக்லேட் ஹீரோ என்கிற அடைமொழியுடன் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக வலம் வருபவர் நடிகர் குஞ்சாக்கோ போபன். சமீபத்தில் இவரது நடிப்பில் ஆபீஸர் ஆன் டூட்டி என்கிற திரைப்படம் வெளியானது. பிரியாமணி கதாநாயகியாக நடித்துள்ள இந்த படம் ஒரு வித்தியாசமான க்ரைம் இன்வெஸ்டிகேஷன் திரில்லர் படமாக வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றி படமாக மாறி உள்ளது. இதை தொடர்ந்து இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார் குஞ்சாக்கோ போபன்.
அந்த வகையில் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு பெண்கள் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார் குஞ்சாக்கோ. மேடையின் கீழ் நின்ற கூட்டத்தில் இருந்த ஒரு பெண் தனது செல்போனில் இருந்த புகைப்படத்தை குஞ்சாக்கோ போபனிடம் காட்டி 27 வருடங்களுக்கு முன்பு உங்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் என்று கூறியதும் ரொம்பவே ஆச்சரியப்பட்டு போன குஞ்சாக்கோ போபன் அவரது செல்போனை வாங்கி அந்த புகைப்படத்தை தனது செல்போனில் படம் பிடித்துக் கொண்டார்.
அது மட்டுமல்ல அந்தப் பெண்ணை மேடை ஏறி வரச் செய்து அவருடனும் இணைந்து தனது செல்போனிலேயே ஒரு செல்பியும் எடுத்து அந்த ரசிகைக்கு இன்னும் கூடுதல் கவுரவத்தையும் அத்தனை பேர் மத்தியில் கொடுத்தார் குஞ்சாக்கோ போபன். இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது.