நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! | ‛கில்' படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹீரோ, வில்லன் யார் தெரியுமா? | அரசியல் கதைகள பின்னனியில் தனுஷ் 54வது படம்! | ஆகஸ்ட் 8ல் 6 படங்கள் ரிலீஸ்… | 2025ல் 50 கோடியைக் கடந்த 10வது படம் 'தலைவன் தலைவி' | பாய் பிரண்ட் உடன் படப்பிடிப்புக்கு வரும் நடிகை | தமிழுக்காக 'வெயிட்டிங்' : சிரிக்கும் சினேகா | எல்லோருடைய வாழ்க்கையையும் வாழ ஆசை: மாசாந்த் நடராஜன் | பணம், புகழ் இருந்தாலும், நிம்மதி, கவுரவம் முக்கியம்: ரஜினிகாந்த் பேச்சு |
முன்னணி மலையாள நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு. டிரைவிங் லைசென்ஸ், தி கிரேட் இண்டியன் கிச்சன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். சிறந்த நடிகருக்கான விருதை பலமுறை பெற்றுள்ளார். திரைப்படங்களில் நடிப்பதோடு பொது வெளியிலும் இவரது செயல்பாடு இருக்கும். எந்த அரசியல்கட்சியிலும் சேரவில்லை என்றாலும் அவ்வப்போது அரசியல் கருத்துக்களை வெளியிடுவார்.
அந்த வகையில் மணிப்பூரில் 2 பெண்களை நிர்வாணப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்ததை கண்டித்து கருத்துக்களை சமூக வலைத்தளத்தில் தெரிவித்து இருந்தார். வன்கொடுமைக்கு எதிராக கேரளாவில் நடந்த சில நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றார். இந்த நிலையில் தனக்கு கொலை மிரட்டல் வருவதாக காக்கநாடு சைபர் கிரைம் போலீசில் சுராஜ் வெஞ்சாரமூடு புகார் அளித்துள்ளார்.
அவர் அளித்துள்ள புகார் மனுவில், “எனக்கு செல்போனில் வெவ்வேறு எண்களில் இருந்து கொலை மிரட்டல்கள் வருகின்றன. கடந்த 3 நாட்களாக வாட்ஸ் அப் மூலமாகவும் சம்பந்தமில்லாதவர்கள் மிரட்டல் விடுக்கிறார்கள். மணிப்பூர் பெண்களுக்கு ஆதரவாக பேசிய நீ கேரள மாநிலம் ஆலுவாவில் ஐந்து வயது சிறுமி படுகொலை செய்யப்பட்டதை ஏன் கண்டிக்கவில்லை என்று கேட்டு ஆபாசமாகவும் அவதூறாகவும் திட்டுகிறார்கள்'' என்று குறிப்பிட்டு உள்ளார்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கடந்த சில தினங்களுக்கு முன்பு சுராஜ்வெஞ்சரமூடு வேகமாக கார் ஓட்டி ஒருவர் மீது மோதி விபத்து ஏற்படுத்தியது குறிப்பிடதக்கது.