உரிமைக்குரல், வானத்தைப்போல, மெய்யழகன் - ஞாயிறு திரைப்படங்கள் | பிளாஷ்பேக்: வித்தியாசமான தோற்றத்தில் விஜயகாந்த் நடித்து விஸ்வரூப வெற்றிகண்ட "வானத்தைப்போல" | தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் |

கன்னட திரையுலகில் உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிவராஜ்குமார். திரையுலகில் நுழைந்து கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக கன்னட படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி நடித்து வந்த சிவராஜ்குமார், தற்போது பிற மொழிகளின் பக்கமும் கவனத்தை திருப்பி உள்ளார். அந்தவகையில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ஜெயிலர் திரைப்படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் நடித்துள்ளார். இந்த படம் ஆகஸ்ட்10ஆம் தேதி வெளியாக இருக்கிறது. அடுத்ததாக தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள கேப்டன் மில்லர் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இப்படி ஒரே நேரத்தில் இரண்டு பெரிய தமிழ் படங்களில் நடித்து விட்ட சிவராஜ்குமார், அடுத்ததாக மலையாள திரையுலகிலும் அடி எடுத்து வைக்க இருக்கிறார். நடிகர் பிரித்விராஜ் இயக்க உள்ள படத்தில் தான் சிவராஜ்குமார் நடிக்க இருக்கிறார் என்று ஒரு தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அனேகமாக மோகன்லாலை வைத்து பிரித்விராஜ் இயக்க உள்ள லூசிபர் படத்தின் இரண்டாம் பாகத்தில் சிவராஜ்குமார் முக்கிய வேடத்தில் நடிக்கலாம் என சொல்லப்படுகிறது. ஏற்கனவே ஜெயிலர் படத்தில் மோகன்லாலுடன் சிவராஜ்குமார் இணைந்து நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.