இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
மலையாளத்தில் கடந்த மே மாதம் பைனரி என்கிற படம் வெளியானது. இந்த படத்தை இயக்குநர் ஜாசிக் அலி என்பவர் இயக்கியிருந்தார். இதில் நடிப்பதற்கு வாய்ப்பு தருவதாக கூறி மைனர் பெண் ஒருவரை ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்றார் என்றும், தொடர்ந்து பலமுறை ஏமாற்றி பாலியல் ரீதியாக பலாத்காரம் செய்துள்ளார் என்றும் இவர் மீது புகார் அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு சில நாட்களாகவே தலைமறைவாக இருந்த ஜாசிப் அலியை கோயிலாண்டி போலீசார் வலை வீசி தேடி வந்தனர். இந்த நிலையில் கேரளாவில் நடக்காவு என்கிற பகுதியில் ஒரு வீட்டில் பதுங்கி இருந்த ஜாசிக் அலியை போலீசார் கைது செய்தனர்.