ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
மலையாள திரையுலகில் கமர்சியல் இயக்குனர்கள் பட்டியலில் தனக்கென ஒரு இடம் பிடித்தவர் இயக்குனர் வைசாக். மம்முட்டி, பிரித்விராஜ் இணைந்து நடித்த போக்கிரி ராஜா என்கிற படத்தை இயக்கிய வைசாக் அதற்கு அடுத்ததாக மோகன்லால் நடிப்பில் புலி முருகன் என்கிற வெற்றி படத்தை கொடுத்து முன்னணி இயக்குனர் வரிசைக்கு உயர்ந்தார். அதேசமயம் மீண்டும் போக்கிரி ராஜா படத்தின் இரண்டாம் பாகமாக மம்முட்டியை வைத்து மதுர ராஜா என்கிற பெயரில் ஒரு படத்தை இயக்கினார். ஆனால் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய அந்த படம் தோல்வியை தழுவியது.
அதன்பிறகு கடந்த வருடம் மீண்டும் மோகன்லாலை வைத்து மான்ஸ்டர் என்கிற படத்தை இயக்கி இருந்தார். ஆனால் இந்த படமும் தோல்வியை தழுவியதுடன் ரசிகர்களின் கிண்டலுக்கும் ஆளானது. இந்த நிலையில் இவர் மீண்டும் மம்முட்டியை வைத்து ஒரு படத்தை இயக்கி இருக்கிறார் என்று சொல்லப்பட்டு வந்தது. தற்போது அந்த படத்திற்கு டர்போ என பெயரிடப்பட்டு பூஜையுடன் துவங்கியுள்ளது. அடுத்த நூறு நாட்களுக்கு இந்த படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெறும்” என வைசாக் கூறியுள்ளார்.