பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

கடந்தாண்டு தெலுங்கில் வெளியான சீதா ராமம் என்ற படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவில் பிரபலமானவர் ஹிந்தி நடிகை மிருணாள் தாக்கூர். அதன் பிறகு பேமிலி ஸ்டார், ஹாய் நன்னா போன்ற தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் நடந்த ஒரு விருது விழாவில், சீதாராமம் படத்திற்காக சிறந்த நடிகைக்கான விருதினை பெற்றார் மிருணாள் தாக்கூர். அப்போது அவருக்கு அந்த விருதினை வழங்கிய தெலுங்கு நடிகர் அல்லு அரவிந்த், மிருணாள் தாக்கூர் கூடிய சீக்கிரமே தெலுங்கு மணமகனை திருமணம் செய்து கொண்டு, ஹைதராபாத்தில் செட்டிலாக வேண்டும் என்று மேடையில் பேசினார்.
அதையடுத்து, டோலிவுட்டில் மிருணாள் தாக்கூர் யாரோ தெலுங்கு நடிகரை காதலிக்கிறார். அதனால் தான் அல்லு அரவிந்த் அப்படி ஒரு செய்தியை வெளியிட்டார் என்று பல நடிகர்களுடன் அவரை இணைத்து பரபரப்பு செய்திகள் வெளியாகி வந்தன. இந்நிலையில் அது குறித்து மிருணாள் தாக்கூர் ஒரு செய்தி வெளியிட்டு இருக்கிறார். அதில், நான் எந்த தெலுங்கு நடிகரையும் காதலிக்கவும் இல்லை, திருமணம் செய்து கொள்ளவும் இல்லை. அந்த விருது விழாவில் அல்லு அரவிந்த் விளையாட்டாக தான் அப்படி பேசினார். அதனால் இதை வைத்து ஆளாளுக்கு தெலுங்கு நடிகர்களுடன் என்னை இணைத்து செய்திகள் வெளியிட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார் மிருணாள் தாக்கூர்.