தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
சமீபத்தில் மலையாளத்தில் நடிகர் மம்முட்டி மற்றும் ஜோதிகா நடிப்பில் வெளியான காதல் ; தி கோர் என்கிற திரைப்படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்திற்கு பல இடங்களில் இருந்து பாசிடிவான விமர்சனங்கள் கிடைக்கின்றன. இந்த படத்தை இயக்குனர் ஜியோ பேபி இயக்கியுள்ளார். இந்த படத்தின் கதையை ஆதர்ஷ் சுகுமாறன் மற்றும் பால்சன் என்கிற இரட்டை கதாசிரியர்கள் இணைந்து எழுதியுள்ளனர்.
இந்த கதையை முதலில் எழுதியதும் இந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக அவர்கள் அணுகியது மலையாள குணச்சித்திர நடிகரான மேத்யூ தேவசி என்பவரைத்தான். அவரும் நடிக்க சம்மதித்து விட்டார். அதன்பிறகு இந்த கதையை கிட்டத்தட்ட 10 முதல் 12 இயக்குனர்கள் வரை இவர்கள் கூறியும் பல காரணங்களால் அவர்கள் அனைவருமே இந்த படத்தை இயக்க மறுத்து விட்டனர்.
இறுதியாக இயக்குனர் ஜியோ பேபியிடம் இந்த கதையை கொண்டு சென்றபோது அவருக்கு இந்த கதை ரொம்பவே பிடித்து விட்டது. அவர்தான் இந்த கதாபாத்திரத்தில் மம்முட்டியை நடிக்க வைத்தால் சிறப்பாக இருக்கும் என்கிற ஆலோசனையைக் கூற, மம்முட்டிக்கும் இந்த கதை பிடித்துப்போய் விட்டது. அதில் நடித்ததன் மூலம் தற்போது இன்னும் ஒரு வெற்றி படத்திற்கு சொந்தக்காரராக மம்முட்டி மாறிவிட்டார்.