கூலி டைம் டிராவல் கதையா.? | 500 கோடி வசூலைக் கடந்த 'சாயாரா' | 100 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'கனிமா' | ஸ்ரீதேவியை பார்த்து இன்ப அதிர்ச்சியான சுதீப் ; உஷார் படுத்திய விஜய் | அடூர் கோபாலகிருஷ்ணன் மன்னிப்பு கேட்க வேண்டும் ; பின்னணி பாடகர் சங்கம் கோரிக்கை | வேட்பு மனுவை நிராகரித்த தயாரிப்பாளர் சங்கம் ; நீதிமன்றத்தை நாடும் பெண் தயாரிப்பாளர் | இந்த ஆட்களை எல்லாம் நிச்சயமாக எல்சியுவில் சேர்க்க மாட்டேன் ; லோகேஷ் கனகராஜ் திட்டவட்டம் | பிளாஷ்பேக்: திறமையான திரைக்கதை, திகைக்க வைக்கும் நடிப்பால் வென்று காட்டிய “தெய்வமகன்” | திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு |
நடிகை பார்வதி தென்னிந்திய மொழிகளையும் தாண்டி பாலிவுட் வரை புகழ்பெற்ற நடிகையாக மாறிவிட்டார். பெரிய ஹீரோக்களின் படங்கள் என்றெல்லாம் பார்க்காமல் கதைக்கும் கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
அந்தவகையில் சமீபத்தில் அவர் தெலுங்கில் நடித்த தூதா மற்றும் ஹிந்தியில் நடித்துள்ள கடக் சிங் என இரண்டு வெப் சீரிஸ்கள் அடுத்தடுத்து வெளியாகி உள்ளன. அடுத்ததாக துல்கர் சல்மான் தயாரிக்கும் படம் ஒன்றில் சூப்பர் ஹீரோ கதாபாத்திரத்தில் பார்வதி நடிக்கிறார் என்ற செய்தி ஒன்று சோசியல் மீடியாவில் வெளியானது.
ஆனால் இந்த தகவலை பார்த்ததும் உடனடியாக தனது சோசியல் மீடியா பக்கத்தில் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார் பார்வதி. இது குறித்து அவர் கூறும்போது, “எந்த ஒரு சூப்பர் ஹீரோ படத்திலும் நடிப்பதற்கு நான் இதுவரை ஒப்பந்தமாகவில்லை. யாராலோ என்ன காரணத்தினாலோ தவறான செய்தி பரப்பப்படுகிறது. ஓகே குட் பை” என்று கூறியுள்ளார்.