பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

நடிகை பார்வதி தென்னிந்திய மொழிகளையும் தாண்டி பாலிவுட் வரை புகழ்பெற்ற நடிகையாக மாறிவிட்டார். பெரிய ஹீரோக்களின் படங்கள் என்றெல்லாம் பார்க்காமல் கதைக்கும் கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
அந்தவகையில் சமீபத்தில் அவர் தெலுங்கில் நடித்த தூதா மற்றும் ஹிந்தியில் நடித்துள்ள கடக் சிங் என இரண்டு வெப் சீரிஸ்கள் அடுத்தடுத்து வெளியாகி உள்ளன. அடுத்ததாக துல்கர் சல்மான் தயாரிக்கும் படம் ஒன்றில் சூப்பர் ஹீரோ கதாபாத்திரத்தில் பார்வதி நடிக்கிறார் என்ற செய்தி ஒன்று சோசியல் மீடியாவில் வெளியானது.
ஆனால் இந்த தகவலை பார்த்ததும் உடனடியாக தனது சோசியல் மீடியா பக்கத்தில் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார் பார்வதி. இது குறித்து அவர் கூறும்போது, “எந்த ஒரு சூப்பர் ஹீரோ படத்திலும் நடிப்பதற்கு நான் இதுவரை ஒப்பந்தமாகவில்லை. யாராலோ என்ன காரணத்தினாலோ தவறான செய்தி பரப்பப்படுகிறது. ஓகே குட் பை” என்று கூறியுள்ளார்.