பிரமானந்தம் - யோகிபாபு சந்திப்பு ஏன்? | ஆந்திரா மதுபான ஊழல் ; விசாரணை வளையத்தில் நடிகை தமன்னா : கோலிவுட் போல் டோலிவுட்டும் கலக்கம் | 3 மணி நேரம் ஓடப் போகும் 'வார் 2' | வாழ்க்கை என்பது ஒரு வட்டம் ; ராஷி கண்ணாவின் புதிய மகிழ்ச்சி | ஸ்வேதா மேனன் மீது எப்ஐஆர் பதிவு ; நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிட விடாமல் தடுக்கும் முயற்சியா? | நீங்க எனக்கு இன்ஸ்பிரேசன் : சிம்ரனை பாராட்டிய திரிஷா | இதுவே உங்கள் மகளாக இருந்தால் என்ன செய்வீர்கள் ? மம்முட்டியிடம் கேள்வி எழுப்பிய பெண் தயாரிப்பாளர் | இதைவிட பெருமை என்ன இருக்கு : முதல்வர் சந்திப்பு குறித்து நடிகை எம்.என்.ராஜம் நெகிழ்ச்சி | தனுஷின் சகோதரிகளை இன்ஸ்டாகிராமில் பின்தொடரும் மிருணாள் தாக்கூர் | 'புஷ்பா 2' தியேட்டர் நெரிசல் விவகாரம்: மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் |
மலையாள நடிகர் பிரித்விராஜ் கடந்த சில வருடங்களுக்கு முன் மோகன்லால் நடித்த லூசிபர் என்கிற படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனராகவும் மாறினார். அதன்பிறகு ப்ரோ டாடி என்கிற படத்தை இயக்கிய பிரித்விராஜ் அடுத்ததாக லூசிபர் படத்தின் இரண்டாம் பாகத்தையும் விரைவில் துவங்க உள்ளார். தான் இயக்கிய முதல் படத்திலேயே குடும்ப அரசியல், வாரிசு அரசியல் ஆகியவற்றை மையப்படுத்திய ஒரு கதையை தேர்ந்தெடுத்திருந்தார் பிரித்விராஜ்.
அதேபோல கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு வெளியான ஜன கன மன மற்றும் குருதி என்கிற என்கிற அரசியல் கதையம்சம் கொண்ட படங்களிலும் நடித்திருந்தார் பிரித்விராஜ். இதனை தொடர்ந்து இயக்குனர்கள் சிலர் அவரை தாங்கள் இயக்கும் அரசியல் சார்ந்த படங்களில் நடிக்க அழைத்தப்போது அந்த படங்களில் நடிக்க மறுத்து விட்டார் பிரித்விராஜ்.
இதுகுறித்து சமீபத்தில் பிரித்விராஜ் கூறும்போது, “அரசியல் கதையம்சம் கொண்ட படங்களை இயக்குவதோ நடிப்பதோ எனக்கு ஒரு பிரச்சனை இல்லை. அதே சமயம் அரசியல் உள்நோக்கத்துடன் ஒரு தரப்பினரை குறிவைத்து தாக்கும் விதமாக எடுக்கப்படும் படங்களில் நடிக்க நான் ஒப்புக்கொள்வதில்லை. என்னுடைய லூசிபர் திரைப்படமும் ஜன கன மன திரைப்படமும் பொதுவான அரசியல் பிரச்சினைகளை மையப்படுத்தியே உருவாகியிருந்தது” என்று கூறியுள்ளார்.