'முத்த மழை' சர்ச்சை பற்றி எதுவும் பேசாத தீ | ஒன்றரை லட்ச ரூபாய் 'டி ஷர்ட்' அணிந்த மகேஷ்பாபு | முன்னணி இயக்குனர்களின் தோல்வி : வருத்தத்தில் தமிழ் சினிமா | பிளாஷ்பேக்: 'சிறை'யின் குறைகள் | பிளாஷ்பேக் : ஆணாக அறிமுகமான விஜய நிர்மலா | 'குபேரா' படத்திற்கு அழுத்தம் கொடுத்த ஓடிடி நிறுவனம் | ராஜமவுலி, மகேஷ்பாபு பட வாய்ப்பைத் தவிர்த்த விக்ரம்? | சாந்தனு ஜோடியாக அஞ்சலி நாயர் | 'திருக்குறள்' படம் உருவானது எப்படி?: இயக்குனர் விளக்கம் | அஜ்மல் மீது நடிகை பாலியல் குற்றச்சாட்டு |
பிரபல மலையாள இயக்குனர் ஜீத்து ஜோசப், மோகன்லாலை வைத்து இயக்கிய திரிஷ்யம் படம் மூலமாக தென்னிந்தியாவையும் தாண்டி பாலிவுட் வரை பேசப்படும் இயக்குனராக உயர்ந்தார். தொடர்ந்து ரசிகர்களை இருக்கையில் கட்டிப்போடும் விதமான கதை அம்சம் கொண்ட படங்களை கொடுத்து வரும் ஜீத்து ஜோசப்பின் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான நேர் திரைப்படமும் வெற்றியை பெற்றுள்ளது. இந்த நிலையில் ஜீத்து ஜோசப்பின் மகள் கேத்தியும் தந்தையின் வழியில் தானும் இயக்குனர் பாதையில் அடி எடுத்து வைத்து தனது முதல் படத்தையும் சத்தமில்லாமல் இயக்கி முடித்து விட்டார்.
'பார் ஆலிஸ்' என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படம் தியேட்டர்களுக்கு வராமல், ஓடிடி தளங்களுக்கும் செல்லாமல் இன்று குட்டி ஸ்டோரீஸ் என்கிற யுடியூப் சேனலில் நேரடியாகவே ரிலீஸ் ஆகிறது. இந்த தகவலை இயக்குனர் ஜீத்து ஜோசப் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டுள்ளார். இந்த படத்தில் திரிஷயம் புகழ் எஸ்தர் அனில் கதாநாயகியாக நடித்துள்ளார். தந்தையைப் போல மகளும் ரசிகர்களை தன் பக்கம் இழுத்து விடுவார் என எதிர்பார்க்கலாம்.