மலையாளத்தில் அறிமுகமான கதிர் | பிளாஷ்பேக்: அம்பிகாவுடன் நெருக்கமாக நடித்த சிவகுமார் | தமிழில் வாய்ப்பு தேடும் ஐஸ்வர்யா மேனன் | பிளாஷ்பேக்: தமிழ் ரசிகர்களை கவர்ந்த முதல் மலையாள லேடி சூப்பர் ஸ்டார் | எனது பாடல்களை அனிருத் பாடல் என்று நினைக்கிறார்கள்: சாம் சி.எஸ் வருத்தம் | பிளாஷ்பேக்: பலாத்கார காட்சியில் பாடலை வைத்து புதுமை படைத்த இயக்குநர் கே பாலசந்தர் | தவறான வீடியோ பதிவுக்கு ஆச்சரியப்பட்ட அல்லு அர்ஜுன் | மீண்டும் காதல் கிசுகிசுவில் சிக்கிய தனுஷ் | அமெரிக்க முன்பதிவு : 'வார் 2'ஐ பின்னுக்குத் தள்ளி முந்தும் 'கூலி' | கமல் தயாரிப்பில் அண்ணன், தம்பி நடிப்பார்களா? |
கடந்த 2021ல் கன்னடத்தில் வெளியான காந்தாரா திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் கதாநாயகனாக நடித்திருந்த ரிஷப் ஷெட்டியே இந்த படத்தை இயக்கியும் இருந்தார். கிராமங்களில் உள்ள காவல் தெய்வங்களை மையப்படுத்தி, பூர்வகுடிகளின் நில உரிமை பற்றி பேசி இருந்த இந்தப்படம் கன்னடத்தில் மட்டுமல்லாது தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு எல்லா இடங்களிலும் வரவேற்பை பெற்றது
குறிப்பாக இந்த படத்தில் இரண்டு கதாபாத்திரங்களில் நடித்த ரிஷப் ஷெட்டி, கர்நாடகாவில் பிரசித்தி பெற்ற தெய்வ கோலா (பூத கோலா) என்கிற பண்டிகையின் போது சாமி ஆடுபவராக கொஞ்ச நேரமே வந்து செல்லும் கதாபாத்திரம் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. அதுமட்டுமல்ல படத்தில் அவர் நடித்த அந்த தெய்வ கோலா நிகழ்ச்சியும் அதன் பின்னணியில் ஒலித்த பாடலும் இசையும் ரசிகர்களை மெய் மறக்க செய்தது.
இந்த நிலையில் தற்போது மங்களூரில் அதேபோன்று சமீபத்தில் நடைபெற்ற தெய்வ கோலா நிகழ்ச்சியில் ரிஷப் ஷெட்டி நேரில் கலந்து கொண்டார்.. இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.