படை தலைவன் படத்தில் விஜயகாந்த் காட்சிக்கு வரவேற்பு | இரண்டு மனைவிகளுடன் விவகாரத்து : வெளிப்படையாகப் பேசிய அமீர்கான் | கரிஷ்மா கபூர் முன்னாள் கணவர் திடீர் மரணம் | ஜுலை, ஆகஸ்ட்டில் 'துருவ நட்சத்திரம்' படத்தை வெளியிட முயற்சி | விஜய் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகிறது 'மெர்சல்' | ஆக்டர் ஆன தஞ்சாவூர் டாக்டர் | சினிமாவை விட்டு விலகப்போகிறேன்: மிஷ்கின் சொல்கிறார் | இமான் இசை நிகழ்ச்சி ரத்து | 1600 தியேட்டர்களில் 'குபேரா' : தயாரிப்பாளர்கள் தகவல் | அடுத்த வாரம் புதிய படங்களின் அப்டேட் வாரம் |
மலையாள திரையுலகிற்கு இந்த பிப்ரவரி மாதம் ஜாக்பாட் மாதம் என சொல்லும் விதமாக வாரம் ஒரு ஹிட் படம் வெளியாகி வருகின்றது. அதிலும் இரண்டு படங்கள் குறைந்த பட்ஜெட்டில் வெளியாகி 50 கோடியை தொட்டுள்ளன. அந்த வகையில் கடந்த பிப்ரவரி ஒன்பதாம் தேதி, ஓரளவு தெரிந்த முகங்களான நஸ்லேன் மற்றும் மமிதா பைஜூ நடித்த பிரேமலு என்கிற படம் வெளியானது. தற்போது வரை 50 கோடியை தாண்டி இந்த படம் வசூலித்துள்ளது இந்தப் படத்தை கிரிஸ் ஏடி என்பவர் இயக்கியுள்ளார்.
இந்த படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தற்போது தெலுங்கிலும் மொழி மாற்றம் செய்து வெளியிடப்பட இருக்கிறது. இதன் தெலுங்கு வெளியீட்டு உரிமையை பிரபல இயக்குனர் ராஜமவுலியின் மகனான எஸ்.எஸ் கார்த்திகேயா பெற்றுள்ளார். வரும் மார்ச்சில் இந்த படம் வெளியாக உள்ள நிலையில் தெலுங்கில் இதன் புரமோஷன் நிகழ்ச்சிகள் துவங்கியுள்ளன. அதன் முதல் கட்டமாக பாகுபலி பாணியில் இந்த படத்தின் புரோமோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். பாகுபலி படத்தில் பிரபாஸும் அனுஷ்காவும் இணைந்து அம்பு விட்டது போல இந்த பிரேமலு ஜோடி ஒன்றாக இணைந்து காதல் அம்புகளை தொடுப்பதாக போன்று இந்த புரோமோ அமைந்துள்ளது.