இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
வளர்ந்து வரும் இளம் கன்னட நடிகை சோனு கவுடா. சினிமாவில் கவர்ச்சியாக நடிப்பதோடு தனது சமூக வலைத்தள பக்கத்தில் கவர்ச்சி படங்களை வெளியிட்டு லட்சக்கணக்கில் பாலோயர்களை வைத்திருப்பவர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேலும் புகழ் பெற்றார்.
சமீபத்தில் எட்டு வயது சிறுமியை தத்தெடுத்திருப்பதாக அறிவித்த சோனு கவுடா அந்த சிறுமியுடன் எடுத்த வீடியோவை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்திருந்தார். அவர் சட்டவிரோதமாக அந்த சிறுமியை தத்தெடுத்திருப்பதாக கர்நாடக மாநில குழந்தைகள் நலத்துறை சார்பில் பெங்களூருவில் உள்ள படரஹள்ளி போலீசில் புகார் செய்யப்பட்டது. சிறுமியை பெற்றோரிடம் இருந்து பணம் கொடுத்து அவர் வாங்கி இருப்பதாகவும் பள்ளிக்கு செல்லும் வயதில் அவரை வீட்டு வேலை செய்ய பயன்படுத்துவதாகவும் அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சோனு கவுடாவை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். சோனு கவுடாவை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து பெங்களூரு மத்திய சிறைச்சாலையில் சோனு அடைக்கப்பட்டார். சிறுமியை மீட்டு அரசு காப்பகத்தில் சேர்த்தனர்.