பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை | 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் |

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக மிகப்பெரிய உயரத்தை தொட்டு விட்டவர் நடிகர் ராம்சரண். குறிப்பாக ஆர்ஆர்ஆர் படத்தின் வெற்றிக்கு பிறகு இவர் படங்கள் மீதான எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது. இந்த நிலையில் திருமணம் ஆகி கிட்டத்தட்ட 10 வருடம் கழிந்த நிலையில் கடந்த வருடம் ராம்சரண் உபாசனா தம்பதிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. இதற்கு ‛கிளின் காரா' என பெயர் சூட்டியுள்ளனர்.
இந்த நிலையில் தான் நடித்து வரும் ‛கேம் சேஞ்சர்' படத்தின் போது கிடைத்த இடைவெளியில் சமீபத்தில் தாய்லாந்துக்கு சுற்றுலா கிளம்பி சென்றனர் ராம்சரண் தம்பதியினர். அங்கே யானை குட்டி ஒன்றை ராம்சரண் குளிப்பாட்டி விடுவதும் குழந்தையுடன் உபாசனா அதை பார்த்து ரசிப்பதுமான புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. இதை தொடர்ந்து சமீபத்தில் தாய்லாந்து சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு ஹைதராபாத் திரும்பி உள்ளார் ராம்சரண்.