துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் | பிளாஷ்பேக் : எம்.எஸ்.பாஸ்கருக்கு விருது கிடைத்திருக்க வேண்டிய கதாபாத்திரங்கள் | மீண்டும் விசாரணைக்கு வருகிறது மான்வேட்டை வழக்கு | வசூலை குவிக்கும் இந்திய அனிமேஷன் படம் | சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்கும் குழந்தைகள் சினிமா | பார்க்கிங் படத்துக்கு 3 விருதுகள் : இயக்குனர், ஹீரோ, எம்.எஸ்.பாஸ்கர் நெகிழ்ச்சி |
நடிகர் பஹத் பாஸில் தொடர்ந்து வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களிடையே தன்னை பற்றி எப்போதும் பேச வைத்துக் கொண்டே இருக்கிறார். அப்படி சமீபத்தில் மலையாளத்தில் அவர் கதாநாயகனாக நடித்த ஆவேசம் திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தில் அவர் ரங்கா என்கிற காமெடி கேங்ஸ்டர் ஆக நடித்துள்ளார். படத்தையும் தாண்டி இவரது கதாபாத்திரம் குறித்து தான் பலரும் சிலாகித்து பேசி வருகின்றனர்.
சமீபத்திய பேட்டி ஒன்றில் பஹத் பாசில் கூறும்போது, “நான் சாதாரணமாக வெளியே செல்வதற்கு யோசிப்பதில்லை. இப்போதும் கூட திடீரென வீட்டில் பால் இல்லாவிட்டாலோ அல்லது எனக்கு தேவையானது இல்லா விட்டாலோ அருகில் உள்ள கடைக்குச் சென்று நான்தான் வாங்கி வருகிறேன். அப்போது ரசிகர்கள் யாரும் ஓடிவந்து என்னை மொய்த்து கொள்வதில்லை. அதே சமயம் என்னை பார்த்து பலர் புன்னகைப்பார்கள். சிலர் செல்பி எடுக்க மொபைல் போன்களை தூக்குவார்கள். அதை பார்த்ததும் அங்கிருந்து உடனடியாக ஓடி வந்து விடுவேன்” என்று கூறியுள்ளார்.