ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
மலையாளத்தில் நடிகர் பிரித்விராஜ் மற்றும் மம்முட்டி இருவரின் நடிப்பில் கடந்த 15 வருடங்களுக்கு முன்பு வெளியான படம் போக்கிரி ராஜா. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் இவர்கள் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார்கள் என தகவல் வந்தது. அரசியல் பின்னணி கொண்ட வரலாற்று படமாக உருவாகும் அந்த படத்திற்கு 'அரிவாள் சுட்டிக நட்சத்திரம்' என்று டைட்டில் வைக்கப்பட்டிருப்பதாகவும் 2012ல் அறிவித்தனர். ஆனால் பத்து வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் அதன் பிறகு மம்முட்டியும், பிரித்திவிராஜும் இணைந்து நடிப்பது குறித்து பலமுறை பேசப்பட்டாலும் அந்தப் படம் குறித்த பேச்சோ அல்லது பெரிய அளவில் செய்திகளோ வெளியாகவில்லை.
இந்த நிலையில் பிரித்விராஜ் நடிப்பில் குருவாயூர் அம்பலநடையில் என்கிற படம் வரும் மே 16ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரித்விராஜிடம், மம்முட்டியும் நீங்களும் இணைந்து நடிப்பதாக பேசப்பட்ட அரிவாள் சுட்டிக நட்சத்திர திரைப்படம் உருவாவதற்கு வாய்ப்பு உண்டா என்று கேட்கப்பட்டது.
அதற்கு பதில் அளித்த அவர் சில காரணங்களால், குறிப்பாக பட்ஜெட் மற்றும் அந்த படத்திற்கான பொருட்களை லொகேஷனுக்கு கொண்டு வருவதற்கான சிரமங்கள் உள்ளிட்ட காரணங்களால் மேற்கொண்டு அந்த படத்தின் வேலைகளை தொடர முடியாமல் கிடப்பில் போடப்பட்டு விட்டது. அதே சமயம் இத்தனை வருடங்களில் அதே சாயல் கதையம்சம் கொண்ட சில படங்களும் வெளியாகி விட்டன. அதனால் இனி அந்த படம் வருவதற்கு வாய்ப்பு இல்லை. அதே சமயம் நல்ல கதை கிடைத்தால் மம்முட்டியுடன் நான் இணைந்து நடிப்பதற்கு நிச்சயம் வாய்ப்பு இருக்கிறது” என்று கூறியுள்ளார்.