ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
2024ம் ஆண்டுக்கான லோக்சபா தேர்தல் பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று இந்த தேர்தலுடன் சேர்த்து ஆந்திராவிற்கான சட்டசபை தேர்தலும் நடைபெற்றுள்ளது. சிரஞ்சீவி, பவன் கல்யாண், பிரபாஸ் ஜூனியர் என்டிஆர், பாலகிருஷ்ணா உள்ளிட்ட பல திரை உலக பிரபலங்கள் தவறாமல் ஓட்டுச்சாவடிக்கு வந்து தங்களது ஓட்டை செலுத்தியுள்ளனர். இது குறித்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளன.
இதில் ஜனசேனா என்கிற கட்சியை நடத்தி வரும் நடிகர் பவன் கல்யாண் பீத்தாபுரம் என்கிற தொகுதியில் சட்டசபை வேட்பாளராக போட்டியிடுகிறார். இந்த நிலையில் நேற்று மங்களகிரியில் உள்ள ஓட்டுச்சாவடியில் தனது மனைவியுடன் ஹெலிகாப்டரில் வந்து இறங்கிய பவன் கல்யாண் அங்கிருந்து காரில் சென்று ஓட்டளித்தார்.
இதேபோல இயக்குனர் ராஜமவுலி வெளிநாட்டிலிருந்து திரும்பியவர் விமான நிலையத்திலிருந்து நேராக வாக்குச்சாவடிக்கு தனது மனைவி மற்றும் மகன் கார்த்திகேயாவுடன் வந்து தனது ஓட்டை செலுத்தினார். அதேபோல நடிகர் பாலகிருஷ்ணா மக்களோடு மக்களாக வரிசையில் நின்று தனது ஓட்டை செலுத்தினாலும் ஒரு கட்சியின் அடையாளத்தை வெளிப்படுத்தும் விதமாக தோளில் துண்டு அணிந்திருந்தது பெரிய சலசலப்பை ஏற்படுத்தியது.