தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

ஆந்திர மாநிலத்தில் சினிமா தியேட்டர் டிக்கெட் கட்டணங்களுக்கு அதிரடியான கட்டுப்பாடுகளை விதித்தது அந்த மாநில அரசு. அதனால் டிக்கெட் கட்டணங்கள் வெகுவாகக் குறைந்துள்ளன. இதன் காரணமாக பெரிய பட்ஜெட் படங்களை வெளியிடும் போது அதற்கான வசூலை அள்ள நீண்ட நாட்களாகும்.
தெலுங்கில் அடுத்தடுத்து சில பெரிய பட்ஜெட் படங்கள் வெளிவர உள்ளன. டிக்கெட் விலை கட்டுப்பாட்டால் அப்படங்களின் வசூல் வெகுவாக பாதிக்கப்படும். இதனிடையே, சமீபத்தில் விசாகப்பட்டிணத்தில் ஒரு போராட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பவன் கல்யாண், “என்னுடைய படங்களைக் குறி வைத்துத்தான் மாநில அரசு டிக்கெட் கட்டணங்களைக் குறைத்துள்ளது. என்னுடைய படங்களைத் திரையிட அரசு தடுத்து நிறுத்தினால் நான் பயப்படவும் மாட்டேன், பின் வாங்கவும் மாட்டேன். நிலைமை இன்னும் மோசமாகப் போனால், என்னுடைய படங்களை மக்களுக்கு இலவசமாகக் காட்டவும் தயங்க மாட்டேன்,” என்று அதிரடியாகப் பேசியுள்ளார்.
மேலும், “டிக்கெட் விலைகளில், வசூலில் வெளிப்படைத்தன்மை இல்லை என அரசு குற்றம் சாட்டுகிறது. மது விலைகளை நிர்ணயிப்பதில் அரசாங்கம் அந்த வெளிப்படைத்தன்மையைப் பின்பற்றுகிறதா என அரசை நான் கேட்கிறேன்,” என்றும் கேட்டுள்ளார்.
பவன் கல்யாண் நடித்துள்ள 'பீம்லா நாயக்' படம் அடுத்த மாதம் திரைக்கு வருகிறது.