சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
மலையாளத்தில் ஒரு அடார் லவ் என்கிற படத்தின் மூலம் பிரபலமானவர் இயக்குனர் ஒமர் லுலு. புருவ அழகி என புகழ் பெற்ற பிரியா பிரகாஷ் வாரியரை இந்த படத்தின் மூலம் அறிமுகப்படுத்தியது இவர்தான். மேலும் ஹேப்பி வெட்டிங், நல்ல சமயம், டமாக்கா உள்ளிட்ட பல படங்களை இவர் இயக்கியுள்ளார். இந்த நிலையில் அவரது படங்களில் தொடர்ந்து சில கதாபாத்திரங்களில் நடித்து வந்த நடிகை ஒருவர் தன்னை கதாநாயகியாக ஆக்குவதாக வாக்குறுதி கொடுத்து இயக்குநர் ஒமர் லுலு தன்னை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்தார் என போலீசில் புகார் அளித்தார்.
இதையடுத்து இயக்குனர் ஒமர் லுலு மீது கொச்சி நெடும்பசேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை துவங்கியுள்ளனர். இந்த நிலையில் தான் போலீசாரால் கைது செய்யப்படலாம் என எதிர்பார்த்த ஒமர் லுலு நீதிமன்றத்தில் தனக்கு முன் ஜாமின் வழங்கக்கோரி விண்ணப்பித்தார். இவரது மனுவை பரிசளித்த நீதிமன்றம் ஒமர் லுலுவுக்கு முன்ஜாமீன் வழங்கியுள்ளதுடன் வரும் ஜூன் 6-ம் தேதி இந்த வழக்கு குறித்து விசாரிக்கப்படும் என்று கூறியுள்ளது.