தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

சமீபத்தில் நடைபெற்று முடிந்த லோக்சபா தேர்தலில் கேரளாவில் திருச்சூர் தொகுதியில் போட்டியிட்ட மலையாள நடிகர் சுரேஷ் கோபி வெற்றி பெற்றுள்ளார். பாஜக சார்பில் போட்டியிட்ட இவர் முதன்முறையாக கேரளாவில் பாஜகவிற்கு எம்பி சீட் பெற்றுத் தந்துள்ளார். பிரச்சாரத்தின்போது இவர், “எனக்கு திருச்சூர் வேண்டும்.. எனக்கு திருச்சூரை தரணும்” என்பது போன்ற கோஷங்களை மக்களிடம் முன்வைத்து இந்த வெற்றியை பெற்றுள்ளார். அவருக்கு திரையுலகிலிருந்து பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வரும் நிலையில் மலையாள நடிகையும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், சித்தா உள்ளிட்ட படங்களில் நடித்தவருமான நிமிஷா சஜயன் சோசியல் மீடியா தாக்குதலுக்கு ஆளாகியுள்ளார்.
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு சிஏஏ மசோதா கொண்டுவரப்பட்ட போது அதை எதிர்த்து கேரளாவில் நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்டார் நிமிஷா சஜயன். அப்போது அதற்கு முந்தைய தேர்தலில் திருச்சூர் எனக்கு வேணும் என குறிப்பிட்டு தோற்றுப்போன சுரேஷ் கோபியை குறிப்பிடும் விதமாக சர்ச்சையான கருத்துக்களை தெரிவித்து இருந்தார் நிமிஷா சஜயன்.
“எப்படி திருச்சூர் வேண்டும் என்று கேட்டவருக்கு திருச்சூரை நாம் கொடுக்கவில்லையோ, அதேபோல இப்போது இந்தியா வேண்டும் என்று கேட்கிறார்கள்.. அவர்களுக்கு நாம் அதை கொடுக்கக்கூடாது” என்று பாஜகவுக்கு எதிரான கருத்தை கூறியிருந்தார் நிமிஷா சஜயன்.
இந்த நிலையில் சுரேஷ்கோபி தற்போது தேர்தலில் வெற்றி பெற்ற நிலையில் அவரது ரசிகர்களும் கட்சி தொண்டர்களும் நிமிஷாவின் சோசியல் மீடியா பக்கத்தில் கடுமையான மற்றும் ஆபாசமான கருத்துக்களை பதிவிட்டு சைபர் தாக்குதலில் இறங்கினர். இதனைத் தொடர்ந்து தனது கமெண்ட் செக்சனை ஆப் செய்து வைத்துள்ளார் நிமிஷா சஜயன்.