எல்லோருடைய வாழ்க்கையையும் வாழ ஆசை: மாசாந்த் நடராஜன் | பணம், புகழ் இருந்தாலும், நிம்மதி, கவுரவம் முக்கியம்: ரஜினிகாந்த் பேச்சு | ஜூன் ஜூலையில் பள்ளிகள் வேண்டாம் ; மலையாள இயக்குனர்கள் அரசுக்கு கோரிக்கை | மோகன்லாலும் மம்முட்டியும் கண்டுகொள்ளவில்லை ; பன்னீர் புஷ்பங்கள் சாந்தி கிருஷ்ணா வருத்தம் | ‛ஜனநாயகன்' படத்தில் நரேன் நடிக்கும் வேடம் இதுதான் | ‛கிச்சா' என்கிற பெயர் தன்னுடன் ஒட்டிக்கொண்டது எப்படி ? சுதீப் புதிய தகவல் | 'தீ' ரஜினியை ரி-க்ரியேட் செய்துள்ளாரா லோகேஷ்? | லகான் கிராம மக்களுடன் அமர்ந்து ‛சிதாரே ஜமீன் பர்' படத்தை பார்த்த அமீர்கான் | பிளாஷ்பேக்: காட்சியும், கானமும் “நான் பாடும் பாடல்” | உழைக்கும் கரங்கள், உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன், பீஸ்ட் - ஞாயிறு திரைப்படங்கள் |
மலையாள திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நடிகர் ஸ்ரீநாத் பாஷி. கடந்த சில மாதங்களுக்கு முன்பு மலையாளத்தில் வெளியாகி, தமிழ் ரசிகர்களிடமும் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற மஞ்சும்மேல் பாய்ஸ் படத்தில் குழிக்குள் தவறி விழும் இளைஞர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தது இவர்தான். நடிப்பில் நல்ல திறமை கொண்ட இவர், அதிகம் சர்ச்சைகளில் சிக்குவதையும் வாடிக்கையாக வைத்துள்ளார்.
அந்த வகையில் சமீபத்தில் பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஸ்ரீநாத் பாஷி விழா மேடையில் ஆவேசம் படத்தில் இடம் பெற்ற ஜடா என்கிற பாடலை பாடினார். அப்போது கீழ் இருந்த ரசிகர்கள் அவரை உற்சாகப்படுத்தவே, அவரும் உற்சாக மிகுதியால் சில மோசமான வார்த்தைகளையும் பிரயோகித்தார். இது குறித்த வீடியோ ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதை தொடர்ந்து நெட்டிசன்கள் பலரும் அவர் இப்படி பொதுவெளியில் மோசமாக வார்த்தைகளை பேசியதற்காக தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
ஆனால் நடிகர் ஸ்ரீநாத் பாஷிக்கு இது போன்ற விஷயங்கள் புதிதல்ல.. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு கூட ஒரு பேட்டியில் போது அந்த நிகழ்ச்சியில் பெண் தொகுப்பாளரிடம் இதேபோன்று அநாகரிகமான வார்த்தைகளை ஸ்ரீநாத் பாஷி பேசியதால் போலீஸாரால் கைது செய்யப்பட்டார் என்பதும் அதனாலேயே அவருக்கு மலையாள திரையுலகில் ரெட் கார்டு போடப்படும் அளவிற்கு நிலைமை சீரியசாக சென்றது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.