2025ல் காமெடிக்கு பஞ்சம்: தியேட்டரில் சிரிப்பு சத்தம் கேட்கல | அடுத்த படம் குறித்து ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்ட தகவல் | 'டாக்சிக்' படத்தில் கங்காவாக நயன்தாரா! | திரிஷ்யம் முதல் பாகத்தின் பார்முலாவில் உருவாகும் 3ம் பாகம் : ஜீத்து ஜோசப் தகவல் | நடிகர் பிரித்விராஜின் தார்யா ஹிந்தி படப்பிடிப்பு நிறைவு | 'தி பெட்' படம், ஹீரோ ஸ்ரீகாந்த், ஹீரோயின் சிருஷ்டி புறக்கணிப்பு | விவாகரத்துக்கு பிறகும் ஒற்றுமையாக வலம் வரும் பிரியதர்ஷன் லிசி தம்பதி | ரஜினியின் அடுத்த பட இயக்குனர்?: நீடிக்கும் குழப்பம் | ரூ.50 கோடி வசூல் கிளப்பில் இணைந்த சர்வம் மாயா | கூட்ட நெரிசலால் கேன்சல் செய்யப்பட்ட ரேப்பர் வேடன் இசை நிகழ்ச்சி : ரயில் விபத்தில் பலியான ரசிகர் |

மறைந்த பிரபல மலையாள குணச்சித்திர நடிகர் திலகனை தமிழ் ரசிகர்கள் அவ்வளவு எளிதில் மறந்து விட மாட்டார்கள். விஜயகாந்த் நடித்த சத்ரியன் படம் மூலம் தமிழுக்கு வந்த அவர் முதல் படத்திலேயே தனது நடிப்பாலும் வசன உச்சரிப்பாலும் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். தொடர்ந்து தமிழில் வில்லனாகவும் குணசித்திர கதாபாத்திரங்களிலும் நடித்தார். அவரது மகன் ஷம்மி திலகனும் மலையாள திரையுலகில் வில்லன் நடிகராக அறிமுகமாகி சமீபகாலமாக குணச்சித்திர நடிப்பிலும் புதிய பரிமாணம் காட்டி ஆச்சரியப்படுத்தி வருகிறார்.
இந்த நிலையில் ஷம்மி திலகனின் மகன் அபிமன்யுவும் தனது தாத்தா மற்றும் தந்தையின் வழியை பின்பற்றி நடிகராக திரையுலகில் நுழைந்துள்ளார். நடிகர் உன்னி முகுந்தன் மலையாளத்தில் கதாநாயகனாக நடித்த வரும் மார்க்கோ என்கிற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் அபிமன்யு. இந்த வாய்ப்பு தனக்கு நடிகர் உன்னி முகுந்தன் மூலமாகவே தேடி வந்தது என்று கூறும் அபிமன்யு, தனது தாத்தாவின் பெயரை தந்தை காப்பாற்றி விட்டார். இவர்கள் இருவரின் பெயருக்கு எந்த பாதிப்பும் வந்து விடாத அளவிற்கு அவர்களது பெயரை நானும் காப்பாற்றுவேன் என்று நம்பிக்கையுடன் கூறுகிறார்.