எல்லோருடைய வாழ்க்கையையும் வாழ ஆசை: மாசாந்த் நடராஜன் | பணம், புகழ் இருந்தாலும், நிம்மதி, கவுரவம் முக்கியம்: ரஜினிகாந்த் பேச்சு | ஜூன் ஜூலையில் பள்ளிகள் வேண்டாம் ; மலையாள இயக்குனர்கள் அரசுக்கு கோரிக்கை | மோகன்லாலும் மம்முட்டியும் கண்டுகொள்ளவில்லை ; பன்னீர் புஷ்பங்கள் சாந்தி கிருஷ்ணா வருத்தம் | ‛ஜனநாயகன்' படத்தில் நரேன் நடிக்கும் வேடம் இதுதான் | ‛கிச்சா' என்கிற பெயர் தன்னுடன் ஒட்டிக்கொண்டது எப்படி ? சுதீப் புதிய தகவல் | 'தீ' ரஜினியை ரி-க்ரியேட் செய்துள்ளாரா லோகேஷ்? | லகான் கிராம மக்களுடன் அமர்ந்து ‛சிதாரே ஜமீன் பர்' படத்தை பார்த்த அமீர்கான் | பிளாஷ்பேக்: காட்சியும், கானமும் “நான் பாடும் பாடல்” | உழைக்கும் கரங்கள், உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன், பீஸ்ட் - ஞாயிறு திரைப்படங்கள் |
நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் அவரது 12வது படம் தற்போது தயாராகி வருகிறது. ஒரு ஸ்பை திரில்லராக உருவாகும் இந்த படத்தில் விஜய் தேவரகொண்டா முதன் முறையாக ஒரு போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஜெர்சி படத்தை இயக்கிய இயக்குனர் கவுதம் தின்னனூரி இயக்குகிறார். கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக விஜய் தேவரகொண்டா உள்ளிட்ட படக்குழுவினர் இலங்கை சென்றனர். இலங்கையில் இறங்கி தான் தங்க வேண்டிய ஹோட்டலுக்குச் சென்ற விஜய் தேவரகொண்டாவுக்கு அங்கு இலங்கையின் பாரம்பரிய கண்டியன் இசைக்குழுவினரின் நடனத்துடன் கூடிய சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. இலங்கையில் கிட்டத்தட்ட மூன்று முதல் நான்கு வாரங்கள் வரை படப்பிடிப்பு நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.