வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' |

நடிகர் மம்முட்டி தற்போது கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் மலையாளத்தில் உருவாகும் படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். அவரது சொந்த பட நிறுவனமே இந்த படத்தை தயாரித்து வருகிறது. இந்த நிலையில் படப்பிடிப்பு நடைபெறும் இடத்திற்கு அருகில் உள்ள வீட்டில் இருக்கும் மகாதேவ் என்கிற சிறுவன் அந்தப் படத்தின் பூஜையன்று படப்பிடிப்பு தளத்தில் துறுதுறுவென்று சுற்றியுள்ளான். அவன் மம்முட்டியின் ரசிகன் என்றும் மம்முட்டி நடித்து கடந்த வருடம் வெளியான கண்ணூர் ஸ்குவாட் என்கிற படத்தை பலமுறை திரும்பத் திரும்ப பார்க்கிறான் என்கிற தகவலும் மம்முட்டியின் காதுகளுக்கு எட்டியது.
அதுமட்டுமல்ல அந்த சமயத்தில் சிறுவனின் பிறந்தநாளும் வரப்போகிறது என்பதை கேள்விப்பட்ட மம்முட்டி அவனது பிறந்த நாளன்று ஒரு லம்பார்கினி கார் பொம்மையை பரிசாக வாங்கிக்கொண்டு அந்த சிறுவனின் வீட்டிற்கே நேராக சென்றார். மம்முட்டியின் வருகையை எதிர்பாராத அந்த சிறுவனும் அவனது பெற்றோரும் மிகவும் ஆச்சரியமும் மகிழ்ச்சியும் அடைந்தனர். அவனுக்கு பிறந்தநாள் பரிசளித்து வாழ்த்தி விட்டு மீண்டும் படப்பிடிப்பிற்கு திரும்பினார் மம்முட்டி.