ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
கடந்த சில நாட்களுக்கு முன்பு மலையாளத்தில் வெளியான ககனாச்சாரி திரைப்படம் வெளியான ஒரு வாரத்திலேயே அதன் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பை வெளியிட்டு ஆச்சரியப்படுத்தினார்கள். இந்த நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு பிஜூமேனன், ஆசிப் அலி நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்ற தலவன் படத்திற்கும், அதன் இரண்டாம் பாகம் உருவாக இருக்கிறது என இந்தப் படத்தின் 65-வது நாள் வெற்றி விழாவில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள்.
கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஜன கன மன படத்தின் மூலம் போலி என்கவுன்டரை வெளிச்சம் போட்டு காட்டி பரபரப்பை ஏற்படுத்திய இயக்குனர் ஜிஸ் ஜாய் தான் இந்த படத்தை இயக்கியிருந்தார். காவல்துறையில் ஒரே ஸ்டேஷனில் சம அந்தஸ்தில் இருக்கும் இரண்டு அதிகாரிகளுக்கு ஏற்படும் ஈகோ மோதலும் அதனை தொடர்ந்து நடக்கும் சம்பவங்களையும் மையப்படுத்தி எதிர்பாராத கோணத்தில் ஒரு புலனாய்வு படமாக கொடுத்திருந்தார். ரசிகர்களிடம் நல்ல வரவேற்பையும் டீசன்ட்டான வசூலையும் பெற்றதைத் தொடர்ந்து தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் அறிவிக்கப்பட்டுள்ளது.