தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
இயற்கையின் சீற்றத்திற்கு அடிக்கடி ஆளாவதில் நம் பக்கத்தில் உள்ள கேரள மாநிலமும் ஒன்று. கடந்த 2018ல் மிகப் பெரிய இயற்கை பேரழிவை சந்தித்து அதில் இருந்து மீண்டு வந்தது. இந்த நிலையில் சமீபத்தில் வயநாடு பகுதியில் ஏற்பட்ட கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக கிட்டத்தட்ட 300க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். பல பேரின் நிலை என்னவென்று தெரியாமல் தற்போது தேடுதல் பணிகளும் பாதிக்கப்பட்டோருக்கான நிவாரணப் பணிகளும் துரித கதியில் நடந்து வருகின்றன. திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் பலரும் தங்களால் இயன்ற அளவு நிவாரண நிதியை தொடர்ந்து வழங்கி வருகின்றனர்.
அந்த வகையில் தற்போது மலையாளம் நடிகர் டொவினோ தாமஸ் தனது பங்களிப்பாக ரூபாய் 25 லட்சம் நிதி வழங்கியுள்ளார். அது மட்டுமல்ல உணவு வழங்குவதற்கு என கிட்டத்தட்ட 1000 எவர்சில்வர் தட்டுக்கள் மற்றும் சமையல் உபகரணங்கள் சிலவற்றையும் அவர் வழங்கியுள்ளார். இதேபோன்று கடந்த 2018ல் கேரளாவில் ஏற்பட்ட இயற்கை சீற்றத்தின் போதும் அவர் தானே களத்தில் இறங்கி மீட்பு பணிகளில் ஈடுபட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.