ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை | 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் | மலேசியாவில் மிரட்டிய 'ஜனநாயகன்' : 'பராசக்தி' படத்துக்கு பிரஷர் | சம்பள விஷயத்தில் 'கண்டிஷன்' போடும் நடிகை | அவமானங்களுக்கு 'ரியாக்ட்' பண்ணாதீர்கள்: நடிகர் சூரி 'அட்வைஸ்' | பாடல்களாய் உலகம் சுற்றுவேன் | 'கொம்புசீவி' தயாராகும் இன்னொரு தனுஷ் |

சமீபத்தில் கேரளாவில் உள்ள வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டதை அடுத்து மூன்று கிராமங்கள் மண்ணில் புதைந்தன. 400க்கு மேற்பட்டோர் உயிரிழந்தார்கள். 350 க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் திரை நட்சத்திரங்கள் பலரும் கேரளாவுக்கு நிதி உதவி வழங்கி வருகிறார்கள்.
அந்த வகையில் தமிழ் சினிமாவின் சீனியர் நடிகைகளான மீனா, சுஹாசினி, குஷ்பு, லிசி பிரியதர்ஷன் ஆகியோர் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை சந்தித்து ஒரு கோடி ரூபாய் நிதி வழங்கியுள்ளார்கள். அந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.