துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
ஆந்திர மாநிலத்தில் நடந்த தேர்தலில் சந்திர பாபு நாயுடு, பவன் கல்யாண், ஆகியோர் இணைந்து அரசை நடத்தி வருகிறார்கள். சந்திர பாபு நாயுடு முதல்வராகவும், பவன் கல்யாண் துணை முதல்வராகவும் உள்ளார்கள். இந்நிலையில் ஆந்திர அரசில் உள்ள சில நியமனப் பதவிகளுக்கு யார், யாரை நியமிக்கலாம் என்ற ஆலோசனை நடந்து முடிந்துவிட்டதாம்.
பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியினருக்கு அதில் 20 சதவீதப் பதவிகள் கொடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல். ஆந்திரா திரைப்பட மற்றும் டிவி வளர்ச்சிக் கழகத்தின் தலைவராக பவன் கல்யாணின் அண்ணனும், சிரஞ்சீவியின் தம்பியுமான நாக பாபு நியமிக்கப்படலாம் எனத் தகவல் வெளியாகி உள்ளது. திரைப்படத் தயாரிப்பாளராகவும், நடிகராகவும் இருக்கிறார் நாக பாபு. திரைப்படத் துறையினருடன் நாகபாபுவுக்கு நெருங்கிய தொடர்பு உள்ளதால் தெலுங்குத் திரையுலகத்தை ஆந்திராவுக்கும் கொண்டு வர முயற்சிப்பார் என்பதால் அந்தப் பதவியை வழங்கலாம் என பவன் ஆலோசனை சொன்னாராம்.
முதலில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் சேர்மன் பதவியைப் பெற நாகபாபு விருப்பமாக உள்ளார் என்றும் செய்திகள் வெளிவந்தன. நாகபாபுவுக்கு ராஜ்ய சபா எம்.பி பதவியைப் பெற்றுத் தர வேண்டும் என்பதுதான் பவனின் முதல் விருப்பமாக இருந்ததாம். ஆனால், அதற்கான காலம் இன்னும் அதிகமாக உள்ளது. அதுவரையில் திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின் தலைவராக இருக்கட்டும் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.