தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

முன்னணி கன்னட நடிகராகன தர்ஷன் தனது காதலி பவித்ரா கவுடாவை கடுமையாக விமர்சித்ததற்காக தனது ரசிகர் ரேணுகாசாமி என்பவரை கூலிப்படையை ஏவி படுகொலை செய்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கபட்டுள்ளார். இந்த வழக்கு நல்ல ஸ்டிராங்காக இருப்பதாகவும், அவர் தப்பிக்க வழியே இல்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் தர்ஷன் விடுதலை அடைய வேண்டும் என்பதற்காக கன்னட நடிகர் சங்கத்தினர் நேற்று சாமராஜ்நகரில் உள்ள சங்க கட்டிடத்தில் சிறப்பு ஹோமம் நடத்தினர். இதில் நடிகர்கள் ஜக்கேஷ், தொட்டண்ணா, தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ், நடிகை ஜெயமாலா உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட நடிகர் நடிகைகள் கலந்து கொண்டனர்.
இதை தொடர்ந்து கொலை வழக்கில் சிக்கிய நடிகருக்காக பூஜை செய்யலாமா என கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளது. இதுகுறித்து தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் கூறுகையில், "இந்த பூஜை கன்னட திரையுலகம் வளர்ச்சி வேண்டி மேற்கொள்ளப்பட்டது. அண்மைக்காலமாக திரையுலகிற்கு சில சிக்கல்கள் வந்துள்ளன. அதிலிருந்து விடுபட்டு மீண்டும் உச்சநிலையை அடைய வேண்டும் என அனைவரும் விரும்புகிறோம். அதற்காகவே சிறப்பு ஹோமம் நடத்தினோம். தர்ஷனுக்காக மட்டுமே நடத்தினோம் என கூறுவதை ஏற்க முடியாது" என்று விளக்கம் அளித்துள்ளார்.