தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! | ‛கில்' படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹீரோ, வில்லன் யார் தெரியுமா? | அரசியல் கதைகள பின்னனியில் தனுஷ் 54வது படம்! | ஆகஸ்ட் 8ல் 6 படங்கள் ரிலீஸ்… | 2025ல் 50 கோடியைக் கடந்த 10வது படம் 'தலைவன் தலைவி' | பாய் பிரண்ட் உடன் படப்பிடிப்புக்கு வரும் நடிகை | தமிழுக்காக 'வெயிட்டிங்' : சிரிக்கும் சினேகா |
கன்னட திரையுலகில் பிரபல நடிகர்களில் ஒருவர் ரக்ஷித் ஷெட்டி. ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக அறிமுகமான கிரிக் பார்ட்டி படத்தில் ஹீரோவாக நடித்ததுடன் ராஷ்மிகாவுக்கும் இவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் வரை சென்று நின்று போனதால் தென்னிந்திய அளவில் பிரபலமான நடிகராக மாறினார். அதைத் தொடர்ந்து கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு சார்லி 777 மற்றும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான பேச்சுலர் பார்ட்டி உள்ளிட்ட படங்கள் மூலம் முன்னணி நடிகராக மாறி வருகிறார். இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் இவரது நடிப்பில் பேச்சுலர் பார்ட்டி என்கிற படம் வெளியானது.
இந்தப் படத்தை இவரே தயாரித்தும் இருந்தார். அர்ஜூன் ராமு என்பவர் இசையமைத்திருந்தார். இந்த படத்தில் ஏற்கனவே வெளியான நியாய எல்லிடே மற்றும் காலிமாத்து ஆகிய படங்களில் இடம் பெற்ற பாடல்களை தங்களது அனுமதி இல்லாமல் இந்த படத்தில் பயன்படுத்தி இருப்பதாக எம்ஆர்பி மியூசிக் என்கிற நிறுவனம் அளித்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. இந்தநிலையில் சமீபத்தில் நடைபெற்ற விசாரணையில் நடிகர் ரக்ஷித் ஷெட்டி நேரில் ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டும் அவர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.
இதனை தொடர்ந்து எம்ஆர்பி மியூசிக் நிறுவனத்தின் அனுமதியின்றி அவர்களது பாடல்களை ரக்ஷித் ஷெட்டி பயன்படுத்தியதை விசாரணையில் உறுதி செய்த நீதிமன்றம் அதற்கான இழப்பீட்டு தொகையாக இருபது லட்சம் ரூபாயை சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு வழங்கும்படி உத்தரவிட்டுள்ளது. மேலும் கடந்த ஜூலை 15ம் தேதி, இந்த பிரச்சனை குறித்து ஆ சோசியல் மீடியாவில் வெளியிட்டிருந்த பதிவில் சில நொடிகள் இசையை பயன்படுத்தியதற்காக எம்ஆர்பி மியூசிக் நிறுவனம் அதிகபட்ச தொகை கேட்பதாக விமர்சித்திருந்தார். அந்த பதிவையும் அவர் நீக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.