ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் | 24 மணி நேரத்தில் 'ஜெயிலர்' சாதனையை முறியடித்த 'கூலி' டிரைலர் | 'கூலி' : அமெரிக்க பிரிமீயர் முன்பதிவில் 1 மில்லியன் வசூல் | தெலுங்குத் திரையுலகத்தில் இன்று முதல் ஸ்டிரைக் | 'ஏஐ' மூலம் மாற்றப்பட்ட கிளைமாக்ஸ்: தனுஷ் எதிர்ப்பு | ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! |
மலையாள திரையுலகில் கடந்த சில நாட்களாகவே பிரபல நட்சத்திரங்கள் பலரும் தொடர் பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி வருகின்றனர். சமீபத்தில் இது குறித்து வெளியான ஹேமா கமிஷன் அறிக்கை தந்த துணிச்சலில் பாதிக்கப்பட்ட நடிகைகள் பலரும் தங்களது கசப்பான அனுபவங்களை குறித்து பொதுவெளியில் பேசி வருகின்றனர். அந்த வகையில் அஞ்சலி அமீர் என்கிற திருநங்கை நடிகை பிரபல மலையாள நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகரான சுராஜ் வெஞ்சாரமூடு மீது வித்தியாசமான ஒரு பாலியல் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
இயக்குனர் ராம் இயக்கத்தில் மம்முட்டி நடிப்பில் வெளியான பேரன்பு படத்தில் மம்முட்டிக்கு ஜோடியாக அவரது மனைவி கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் தான் நடிகை அஞ்சலி அமீர். அந்த படத்தில் மலையாள நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடுவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஆனால் தமிழில் அவரது காட்சிகள் இடம் பெறவில்லை.
“அந்த படப்பிடிப்பு சமயத்தில் நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு என்னிடம் வந்து உங்களைப் போன்ற திருநங்கைகள் சாதாரண பெண்களைப் போல சந்தோஷத்தை உணர முடியுமா என்று கேட்டபோது நான் மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன். உடனடியாக மம்முட்டியிடமும் படத்தின் இயக்குனரிடமும் இது குறித்து தெரிவித்தேன். அவர்கள் இருவரும் அந்த நடிகரை அழைத்து கண்டித்தனர். அவரும் என்னிடம் அதுகுறித்து மன்னிப்பு கேட்டதுடன் படப்பிடிப்பு முடியும் வரை என்னிடம் எந்த ஒரு வார்த்தையும் பேசாமல் டீசன்டாக நடந்து கொண்டார். அதற்காக அவரை நான் பாராட்டவும் செய்கிறேன்” என்று கூறியுள்ளார்.