விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை | 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் | மலேசியாவில் மிரட்டிய 'ஜனநாயகன்' : 'பராசக்தி' படத்துக்கு பிரஷர் |

நடிகர் பிரித்விராஜ் நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆடுஜீவிதம் மற்றும் குருவாயூர் அம்பலநடையில் என இரண்டு படங்கள் அடுத்தடுத்து வெளியாகின. இதில் ஆடுஜீவிதம் திரைப்படம் சீரியஸான கதை அம்சத்துடன் வெளியாகி இருந்தது. இதற்கு முற்றிலும் மாறாக குருவாயூர் அம்பலநடையில் படத்தில் காமெடியில் கலக்கியிருந்தார் பிரித்விராஜ். தற்போது மோகன்லாலை வைத்து லூசிபர் படத்தின் இரண்டாம் பாகமான எம்புரான் படத்தை இயக்கி வரும் பிரித்விராஜ் கிட்டத்தட்ட இறுதி கட்ட படப்பிடிப்பை நெருங்கியுள்ளார்.
இந்த நிலையில் அவர் நடிக்கும் புதிய படத்திற்கு நோபடி (Nobody) என்று டைட்டில் வைக்கப்பட்டு அறிவிப்பு வெளியாகி உள்ளது. கடந்த வருடம் மம்முட்டி நடிப்பில் வித்தியாசமான ஹாரர் மிஸ்டரி திரில்லர் படமாக வெளியான ரோஷாக் படத்தை இயக்கிய இயக்குனர் நிசாம் பஷீர் தான் இந்த படத்தை இயக்க உள்ளார். இ4 என்டர்டைன்மென்ட் நிறுவனத்துடன் பிரித்விராஜும் இணைந்து இந்த படத்தை தயாரிக்கிறார்.