மலையாளத்தில் அறிமுகமான கதிர் | பிளாஷ்பேக்: அம்பிகாவுடன் நெருக்கமாக நடித்த சிவகுமார் | தமிழில் வாய்ப்பு தேடும் ஐஸ்வர்யா மேனன் | பிளாஷ்பேக்: தமிழ் ரசிகர்களை கவர்ந்த முதல் மலையாள லேடி சூப்பர் ஸ்டார் | எனது பாடல்களை அனிருத் பாடல் என்று நினைக்கிறார்கள்: சாம் சி.எஸ் வருத்தம் | பிளாஷ்பேக்: பலாத்கார காட்சியில் பாடலை வைத்து புதுமை படைத்த இயக்குநர் கே பாலசந்தர் | தவறான வீடியோ பதிவுக்கு ஆச்சரியப்பட்ட அல்லு அர்ஜுன் | மீண்டும் காதல் கிசுகிசுவில் சிக்கிய தனுஷ் | அமெரிக்க முன்பதிவு : 'வார் 2'ஐ பின்னுக்குத் தள்ளி முந்தும் 'கூலி' | கமல் தயாரிப்பில் அண்ணன், தம்பி நடிப்பார்களா? |
மலையாளத்தில் இளம் முன்னணி நடிகராக வளர்ந்து விட்ட நடிகர் டொவினோ தாமஸ் தான் தேர்ந்தெடுக்கும் வித்தியாசமான கதை, வித்தியாசமான கதாபாத்திரங்கள் மூலம் படத்திற்கு படம் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த வகையில் அடுத்ததாக அவர் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் அஜயண்டே இரெண்டாம் மோஷனம். ஜித்தின் லால் என்பவர் இயக்கி உள்ள இந்த படம் மூன்று விதமான காலகட்டங்களில் நடைபெறும் விதமாக உருவாகியுள்ளது. இதில் டொவினோ தாமஸ் மூன்று வேடங்களில் நடித்துள்ளார். கதாநாயகிகளாக கிர்த்தி ஷெட்டி, ஐஸ்வர்யா ராஜேஷ், சுரபி லட்சுமி ஆகியோர் நடித்துள்ளனர். வரும் செப்டம்பர் 12ம் தேதி இந்த படம் வெளியாக இருக்கும் நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியானது.
இந்த நிலையில் இந்த டிரைலரை கேஜிஎப், சலார் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் பிரசாந்த் நீல் மற்றும் கேஜிஎப் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் ஆகியோர் சமீபத்தில் பார்த்து ரசித்ததுடன் இந்த படத்தின் கதை அம்சம், மேக்கிங், டொவினோ தாமஸின் நடிப்பு உள்ளிட்டவை குறித்து சிலாகித்து பாராட்டியுள்ளனர். இதனைத் தொடர்ந்து மகிழ்ச்சியும் உற்சாகமும் அடைந்துள்ள டொவினோ தாமஸ் இது குறித்த புகைப்படங்களை தனது சோசியல் மீடியாவில் பதிவிட்டு உங்களது பாராட்டு எங்களை இன்னும் பெரு மகிழ்ச்சி அடைய வைக்கிறது என்று கூறியுள்ளார்.