ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
கடந்த வருடம் மலையாளத்தில் தி கேரளா ஸ்டோரி என்கிற படம் வெளியாகி மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. அப்பாவி ஹிந்து பெண்களை இஸ்லாம் மதத்திற்கு மாற்றி வெளிநாட்டில் உள்ள ஐஎஸ்ஐ பயங்கரவாதிகள் குழுவிற்கு அனுப்பி வைக்கும் கும்பலை பற்றிய ஒரு கதையாக உண்மை சம்பவத்தின் அடிப்படையில் இந்த படம் உருவாகி இருந்தது.
மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்திய இந்த படம் மிகப்பெரிய அளவில் வசூலையும் ஈட்டியது. இதைத் தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. தற்போது அதற்கான கதை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார் படத்தின் இயக்குனர் சுதீப்தோ சென்.
இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் சமீபத்தில் கேரளாவில் வெளியாகி மலையாள திரையுலகையே ஒரு உலுக்கு உலுக்கிய நீதிபதி ஹேமா கமிஷன் அறிக்கையில் சொல்லப்பட்ட விஷயங்களை மையப்படுத்தி உருவாகிறது என சோசியல் மீடியாவில் ஒரு தகவல் பரவ ஆரம்பித்தது. இந்த படத்தின் இயக்குனர் சுதீப்தோ சென் இந்த தகவலில் எந்த உண்மையும் இல்லை என்றும் இந்த செய்தியை பார்த்துவிட்டு நானும் தயாரிப்பாளர் விபுல்ஷாவும் விழுந்து விழுந்து சிரித்தோம் என்று கூறியுள்ளார். அதே சமயம் இந்த இரண்டாம் பாகம் எந்த பின்னணியில் உருவாகிறது என்பதை பற்றி அவர் மூச்சுக் கூட விடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.