ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
கடந்த சில வாரங்களுக்கு முன்பு மலையாள திரையுலகில் வெளியான நீதிபதி ஹேமா கமிஷன் அறிக்கை ஏற்படுத்திய தாக்கமும் அது கொடுத்த தைரியமும் பல நடிகைகள் தாங்கள் சந்தித்த பாலியல் துன்புறுத்தல்கள் பற்றி வெளிப்படையாக பேசவும் காவல்துறையில் புகார் அளிக்கவும் வைத்தது. அந்த வகையில் பிரபல மலையாள வில்லன் மற்றும் குணசத்திர நடிகரான சித்திக் மீது இளம் நடிகை ஒருவர் திருவனந்தபுரம் காவல் நிலையத்தில் பாலியல் புகார் அளித்தார். இதனை தொடர்ந்து கேரள உயர்நீதிமன்றத்தில் சித்திக் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டது.
இதனால். தான் கைது செய்யப்படாமல் இருப்பதற்காக சில நாட்களாக தலைமறைவானார் நடிகர் சித்திக். அதை தொடர்ந்து சமீபத்தில் உச்சநீதிமன்றத்தில் இவரை கைது செய்வதற்கு தடை விதித்து இடைக்கால ஜாமின் வழங்கி உத்தரவிடப்பட்டது. தனக்கு ஜாமின் கிடைத்ததை தொடர்ந்து தலைமறைவில் இருந்து வெளியே வந்து தற்போது பொதுவெளியில் தலை காட்டத் துவங்கியுள்ளார் நடிகர் சித்திக். அந்த வகையில் தனது பிறந்த நாளையும் தனது பேரனின் நூல்கட்டு விழாவையும் ஒரு சேர கொண்டாடி மகிழ்ந்துள்ளார் சித்திக். இது குறித்த புகைப்படங்களை சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளார் அவரது மகன் ஷாகின் சித்திக்.