விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை | 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் | மலேசியாவில் மிரட்டிய 'ஜனநாயகன்' : 'பராசக்தி' படத்துக்கு பிரஷர் |

மலையாள நடிகையான நிகிலா விமல் கடந்த சில வருடங்களுக்கு முன்பே தமிழில் சசிகுமாரின் வெற்றிவேல், கிடாரி மற்றும் கார்த்தியின் தம்பி உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். ஆனாலும் சமீபத்தில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான வாழை திரைப்படம் நிகிலா விமலுக்கு மிகப்பெரிய பெயரை பெற்று தந்துள்ளது. இன்னொரு பக்கம் மலையாளத்தில் 'குருவாயூர் அம்பல நடையில், நுனக்குழி' மற்றும் சமீபத்தில் வெளியான கத இன்னுவர உள்ளிட்ட படங்களிலும் நிகிலா விமலின் நடிப்பு பாராட்டுக்களை பெற்று வருகிறது. ஆனால் கடந்த 2022ல் உன்னி முகுந்தன் தயாரித்து கதாநாயகனாக நடித்த மேப்படியான் என்கிற திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க அழைப்பு வந்த போது மறுத்துவிட்டார் நிகிலா விமல். சமீபத்திய பேட்டி ஒன்றில் அதற்கான காரணத்தை அவர் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, “மேப்படியான் படத்தின் இயக்குனர் விஷ்ணு மோகன் என்னை சந்தித்து அந்த படத்தில் என்னுடைய கதாபாத்திரம் குறித்து கூறியபோது அதில் செய்வதற்கு ஒன்றுமே இல்லை என்று தான் தோன்றியது. ஆனாலும் எனக்கு முழு கதையை கூறுங்கள் என்று கேட்டபோது அவரிடம் அப்போது முழுக்கதை தயாராக இல்லை. கேட்ட அளவிற்கு அந்த கதாபாத்திரம் என்னை ஈர்க்கவில்லை என்பதால் நான் அதில் நடிக்க மறுத்து விட்டேன். அப்போது இயக்குனர் விஷ்ணு மோகனின் முகத்தில் நான் மிகப்பெரிய ஏமாற்றத்தை பார்த்தேன். அதேசமயம் அடுத்ததாக அவர் 'கத இன்னுவர' என்கிற படத்தின் ஸ்கிரிப்ட்டுடன் மீண்டும் என்னிடம் வந்தார். அந்த படத்தின் கதையும் எனது கதாபாத்திரமும் எனக்கு ரொம்பவே பிடித்திருந்தது. அதனால் உடனே ஒப்புக்கொண்டு நடித்தேன்” என்று கூறியுள்ளார்.