ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை | 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் | மலேசியாவில் மிரட்டிய 'ஜனநாயகன்' : 'பராசக்தி' படத்துக்கு பிரஷர் | சம்பள விஷயத்தில் 'கண்டிஷன்' போடும் நடிகை | அவமானங்களுக்கு 'ரியாக்ட்' பண்ணாதீர்கள்: நடிகர் சூரி 'அட்வைஸ்' |

மலையாள நடிகர் விநாயகன் ஏற்கனவே தமிழில் திமிரு, மரியான் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தாலும் கடந்த வருடம் ரஜினிகாந்த் உடன் இணைந்து நடித்த ஜெயிலர் திரைப்படம் அவரது திரையுலக வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது. அவரது வர்மா கதாபாத்திரம் ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. ஆனாலும் அவரது குணாதிசயங்களாலும் பிரச்னைக்குரிய செயல்பாடுகளாலும் பெரிய அளவில் அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமாகவில்லை. இந்த நிலையில் தற்போது கதையின் நாயகனாக ஒரு படத்தில் நடித்து வருகிறார் விநாயகன். மலையாளத்தில் உருவாகும் இந்த படத்தில் நடிகர் மம்முட்டி வில்லனாக முக்கிய வேடத்தில் இருக்கிறார் என்பது தான் இதில் ஆச்சரியமான செய்தி.
அது மட்டுமல்ல இந்த படத்தை மம்முட்டியின் சொந்த நிறுவனமான மம்முட்டி கம்பெனியே தயாரிக்கிறது. துல்கர் சல்மானின் வே பாரர் பிலிம்ஸ் இந்த படத்தை வெளியிடுகிறது. அறிமுக இயக்குனர் ஜித்தின் கே ஜோஸ் என்பவர் இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக நாகர்கோவிலில் பகுதியில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தற்போது மம்முட்டியும் இந்த படத்தில் நடிப்பதற்காக படப்பிடிப்பில் இணைந்துள்ளார். விநாயகனும் அவரும் படப்பிடிப்பு தளத்தில் சந்தித்துக் கொண்ட புகைப்படம் ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி இதை உறுதிப்படுத்தி உள்ளது.