தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

கன்னட திரையுலகின் பிரபல நடிகர் தர்ஷன் தனது காதலியான நடிகை பவித்ரா கவுடாவுக்கு தனது ரசிகரான ரேணுகா சுவாமி என்பவர் தொடர்ந்து ஆபாச செய்தி அனுப்பி தொல்லை கொடுத்தார் என்பதற்காக அவரை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்கு மேலாக சிறைவாசம் செய்து வரும் அவர் முதலில் தான் அடைக்கப்பட்டிருந்த பரப்பன அக்ரஹாரா சிறையில் முறைகேடாக பல வசதிகளை ஏற்படுத்திக் கொண்டார் என குற்றச்சாட்டு எழுந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பெல்லாரி சிறைக்கு மாற்றப்பட்டார்.
இன்னொரு பக்கம் தொடர்ந்து தனக்கு ஜாமீன் பெறுவதற்கான முயற்சிகளையும் எடுத்து வருகிறார் தர்ஷன். ஏற்கனவே அவரது ஜாமீன் மனுக்கள் சிலமுறை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. அதே சமயம் பெங்களூரு நீதிமன்றம் அவர் கடைசியாக விண்ணப்பித்திருந்த ஜாமீன் மனு மீதான விசாரணையை கடந்த மாதம் முழுவதும் வெவ்வேறு தேதிகளில் தள்ளி வைத்து வந்தது.
இந்த நிலையில் நேற்று இந்த மனுவின் மீதான விசாரணை வந்த போது மீண்டும் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த உத்தரவிட்டுள்ளது பெங்களூரு நீதிமன்றம். அதே சமயம் தர்ஷன் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்து கொள்ளலாம் என்கிற ஒரு ஆறுதலான தகவலையும் அதில் தெரிவித்துள்ளது.