குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி |

மலையாள திரையுலகில் பழம்பெரும் நடிகையான நெய்யாற்றின்கரை கோமளம் உடல் நலக்குறைவு காரணமாக நேற்று காலமானார். இவருக்கு வயது 96. கடந்த 1951ல் டார்ஜான் படத்தை தழுவி மலையாளத்தில் காட்டை மையப்படுத்தி வெளியான முதல் படமான வனமாலா என்கிற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார் கோமளம். அதன் பிறகு 1952 ல் நடிகர் பிரேம் நசீர் கதாநாயகனாக அறிமுகமான மருமகள் படத்தில் அவருக்கு ஜோடியாகவும் நடித்தார் கோமளம்.
1955ல் வெளியான நியூஸ் பேப்பர் பாய் என்கிற படத்தில் அவரது நடிப்பு மிகவும் பேசப்பட்டது. ஆனாலும் 1955 வரை நான்கு வருடங்கள் மட்டுமே தனது நடிப்பை தொடர்ந்த கோமளம் குடும்பப் பிரச்சினை மற்றும் அப்போது சமூகத்தில் எழுந்த சில எதிர்ப்புகள் காரணமாக நடிப்பை விட்டு ஒதுங்கி திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.