ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
கன்னட நடிகர் கிச்சா சுதீப்பின் தாயார் சரோஜா சஞ்சீவ் இன்று (அக்.,20) காலை காலமானார். உடல்நலக் குறைவால் பெங்களுருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவரது உடல் ஜே.பி.நகரில் உள்ள சுதீப்பின் இல்லத்திற்கு நண்பகலில் கொண்டு வரப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அவருக்கு வயது 86.
இதனை அறிந்த கர்நாடகாவின் துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் எக்ஸ் தளத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர், சுதீப் மற்றும் சரோஜாவின் படத்தை வெளியிட்டு, “நடிகர் கிச்சா சுதீப்பின் தாயார் திருமதி சரோஜா காலமான செய்தி கேட்டு மனம் உடைந்தேன். அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன், இந்த இழப்பை தாங்கும் சக்தியை இறைவன் சுதீப் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு வழங்கட்டும். ஓம் சாந்தி.” எனப் பதிவிட்டுள்ளார்.